என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே கைக்குழந்தையை கொன்று நர்ஸ் தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே கைக்குழந்தையை கொன்று நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். அவரது மனைவி ஆஷா (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு கவியாழினி என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. வினோத் குமார் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஆஷா மணலூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில தினங்களாக குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. தான் வேலை பார்த்து வந்த தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கும் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் குழந்தையின் நிலைமையில் எதுவும் முன்னேற்றம் இல்லாததால் கணவர் வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்த அவரது மனைவி ஆஷா உடன் புறப்பட்டு ஊருக்கு வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் வினோத்குமார் ஊர் திரும்பவில்லை.

    இதனால் மனமுடைந்த ஆஷா வீட்டில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். வீட்டின் கதவு வெகுநேரம் திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர்.

    அப்போது தூக்கில் ஆஷா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது குழந்தை கவியாழினி இறந்து கிடந்தது.இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்தவுடன் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்றனர். குழந்தை, ஆஷா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆஷா தனது குழந்தையை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். என்றாலும் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×