என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு வலைவீச்சு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று ரமேஷ் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமியை ரமேஷ் குச்சம்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஒரு வாரம் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது ரமேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் ரமேஷ் வேலைக்கு செல்வதாக அந்த சிறுமியிடம் கூறி விட்டு அங்கிருந்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த அவலநிலை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த ரமேசை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று ரமேஷ் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமியை ரமேஷ் குச்சம்பட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஒரு வாரம் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது ரமேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் ரமேஷ் வேலைக்கு செல்வதாக அந்த சிறுமியிடம் கூறி விட்டு அங்கிருந்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த அவலநிலை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த ரமேசை தேடி வருகின்றனர்.
Next Story






