search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து காயம்
    X
    விபத்து காயம்

    சிவகாசி அருகே விபத்தில் 4 பேர் காயம்

    சிவகாசி அருகே விபத்தில் 4 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள முனீஸ்நகரை சேர்ந்தவர் வீரபொம்மு (வயது 22). இவர் சிவகங்கை சட்டகல்லூரியில் படித்து வருகிறார். இவர் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த பாண்டியன் மகள் கார்த்திகா (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த கண்ணன் மகன் கருத்தப்பாண்டியின் வாகனம் வீரபொம்மு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வீரபொம்மு, கார்த்திகா, கருத்தப்பாண்டி மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சிவகார்த்திக் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×