search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வெம்பக்கோட்டை அருகே மது விற்ற 3 பேர் கைது

    வெம்பக்கோட்டை அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி பெட்டிக்கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது சண்முகவேல் (வயது 52) என்பவரின் கடையில் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். அதேபோல தாயில்பட்டியை சேர்ந்த சுதர்சன் (32), வெற்றிலையூரணியை சேர்ந்த முத்து (42) ஆகியோரிடமிருந்து தலா 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களையும் கைது செய்தனர்.
    Next Story
    ×