என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்13 Dec 2021 10:06 AM GMT (Updated: 13 Dec 2021 10:06 AM GMT)
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மணல்மேடு அருகே உச்சிதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் மனைவி சங்கீதா (வயது35) என்பவர் ஒரு பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு நபர் பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்து கொண்டு அவர் சத்தமிட்டதால் சங்கிலியை விட்டு விட்டு அந்த நபர் அங்கிருந்த தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சங்கீதா மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கீதாவிடம் சங்கிலியை பறித்த நபர், அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து சங்கிலியை பறிக்க முயன்று தப்பிச்சென்ற நபரின் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பொன்னுக்குட்டி மகன் வீரபாண்டி (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சங்கீதாவிடம் சங்கிலியை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து வீரபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த வீரபாண்டி, இன்று(திங்கட்கிழமை) மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மணல்மேடு அருகே உச்சிதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் மனைவி சங்கீதா (வயது35) என்பவர் ஒரு பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு நபர் பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்து கொண்டு அவர் சத்தமிட்டதால் சங்கிலியை விட்டு விட்டு அந்த நபர் அங்கிருந்த தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சங்கீதா மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கீதாவிடம் சங்கிலியை பறித்த நபர், அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து சங்கிலியை பறிக்க முயன்று தப்பிச்சென்ற நபரின் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பொன்னுக்குட்டி மகன் வீரபாண்டி (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சங்கீதாவிடம் சங்கிலியை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து வீரபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த வீரபாண்டி, இன்று(திங்கட்கிழமை) மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X