என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையன்
மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையை சேர்ந்தவர் வீரா (வயது 37). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
கடைக்கு விரைந்து வந்த வீரா திருடனை கையும் களவுமாக பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருடனை விசாரித்தபோது அவன் சென்னை கொத்தவால்சாவடி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 58) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






