என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்12 Dec 2021 8:39 AM GMT (Updated: 12 Dec 2021 8:39 AM GMT)
14-ம் கட்ட தடுப்பூசி முகாம் 689 மையங்களில் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 19.95 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 17.69 லட்சம் பேர் முதல் தவணை, 9.68 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 5.16 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை செலுத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையில் 14-ம் கட்ட தடுப்பூசி முகாம் 689 மையங்களில் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் , பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழக்கம்போல் ஒரு லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் 98 ஆயிரத்து 858 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.’ கடந்த முகாமில் 73 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இம்முறை கூடுதலாக 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது வரவேற்கத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X