search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆரணியில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது

    ஆரணியில் வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஆரணி:

    ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி செல்வி (வயது 54). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். செல்வியின் வீட்டில் நுழைந்த மர்மநபர் 4½ பவுன் தாலி சரடை திருடி சென்றனர். செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருடரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், வெங்கடேசன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ரூபன்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆரணி அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (44) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் செல்வியின் வீட்டில் புகுந்து ஆகஸ்டு மாதம் 4½ பவுன் தாலி சரடை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×