search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம்- 2 பேர் கைது

    மாமல்லபுரம் அருகே திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்து வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆடுகளை திருட முயன்ற திரூப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த உமேஷ், வினித் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி திருட்டு ஆடுகளை இறைச்சி வியாபாரத்துக்கு வாங்கும் முள்ளிப்பாக்கத்தை சேர்ந்த சிதியோன், திருக்கழுகுன்றத்தை சேர்ந்த ஆதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் 30க்கும் மேற்பட்ட திருட்டு ஆடுகளை வாங்கி இறைச்சி வியாபாரம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×