என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் நர்சு கடத்தலா? தாய் போலீசில் புகார்
Byமாலை மலர்6 Dec 2021 10:19 AM GMT (Updated: 6 Dec 2021 10:19 AM GMT)
அரியாங்குப்பத்தில் நர்சு கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்த காக்கையன்தோப்பு அபிராமி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி அஞ்சாலாட்சி. இவர்களுக்கு அய்யப்பன் (வயது19) என்ற மகனும் மகேஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகாலிங்கம் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அஞ்சாலாட்சி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மகேஸ்வரி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தவளக்குப்பத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சு படித்து முடித்தார்.
தற்போது ஒரு மாதமாக கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மகேஸ்வரி நர்சாக வேலை பார்த்து வந்தார்.
ஆனால், மகேஸ்வரி வேலைக்கு செல்வது அஞ்சாலாட்சிக்கு பிடிக்கவில்லை. மகேஸ்வரியை வேலைக்கு செல்லவேண்டாம் என்று அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அதனையும் மீறி மகேஸ்வரி வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மகேஸ்வரி வேலைக்கு செல்ல தயாரான போது அஞ்சாலாட்சி வேலைக்கு செல்லவேண்டாம் என தடுத்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மகேஸ்வரியை அஞ்சாலாட்சி தாக்கி திட்டியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தாய் தாக்கி திட்டியதால் மகேஸ்வரி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மகேஸ்வரி இல்லை.
இதையடுத்து அஞ்சாலாட்சி தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் மகேஸ்வரியை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X