என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுண்ணாம்பாற்றில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது
Byமாலை மலர்6 Dec 2021 3:07 AM GMT (Updated: 6 Dec 2021 3:07 AM GMT)
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுண்ணாம்பாற்றில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரியாங்குப்பம்:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. மேலும் தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில படகுகள் ஆற்றில் மூழ்கியதால் என்ஜின் பழுதானது. பாரடைஸ் பீச்சில் பயணிகளை இறக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் படகுசவாரி தொடங்கியது. பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்து செல்லப்படவில்லை.
மாறாக ஆற்றிலேயே சுற்றி காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே பாரடைஸ் பீச்சில் 2 ஜெட்டிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தான் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. மேலும் தமிழக பகுதியில் உள்ள வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில படகுகள் ஆற்றில் மூழ்கியதால் என்ஜின் பழுதானது. பாரடைஸ் பீச்சில் பயணிகளை இறக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் படகுசவாரி தொடங்கியது. பாரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த 2 ஜெட்டிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு அழைத்து செல்லப்படவில்லை.
மாறாக ஆற்றிலேயே சுற்றி காண்பிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே பாரடைஸ் பீச்சில் 2 ஜெட்டிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தான் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X