search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் தவிக்கும் பொதுமக்கள்

    இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி எல்லைப் பகுதியில் பாபா நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை அந்தப்பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .

    இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சிரமப்படுவதாகவும் எனவே விரைவாக தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×