என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கயம் - சேவூரில் ரூ.31 லட்சத்திற்கு கொப்பரை, நிலக்கடலை ஏலம்
Byமாலை மலர்1 Dec 2021 7:34 AM GMT (Updated: 1 Dec 2021 7:34 AM GMT)
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
காங்கயம்:
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.88 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகள் 22 மூட்டை (1,123 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
காங்கயம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர். இதில், ரூ.88 ஆயிரத்து 400க்கு கொப்பரை விற்பனையானது. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.103க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.101க்கும் விற்பனையானது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார்.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 940 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,150 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,900 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,550 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X