search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    புதுச்சேரியில் பகலில் வெயில்- இரவில் மழை

    புதுச்சேரியில் இரவு பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது. 24 மணி நேரத்தில் 15.2 செ.மீ. மழை பதிவானது. இதனால் புதுவை நகரம், கிராமப்பகுதிகள் என அனைத்தும் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. நேற்று முன்தினம் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் மழையால் சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் துணிகளை வெயிலில் காய வைத்தனர்.

    நேற்று பகல் முழுவதும் வெயில் இருந்து வந்தநிலையில் இரவு 9 மணியளவில் திடீரென மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன்பிறகும் லேசாக விட்டு தூறியபடியே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    Next Story
    ×