என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு
Byமாலை மலர்30 Nov 2021 9:24 AM GMT (Updated: 30 Nov 2021 9:24 AM GMT)
கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நீர் நிலைகள் தூர்வாருதல், சாலை அமைத்தல், வடிகால்கள் தூர்வாருதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், பூங்கா அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள், சுற்றுச்சுவர், கழிப்பிடம், மதிய உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத் தலாம். நகரப்பகுதியில் நவீன நூலகங்கள், அறிவு சார் மையங்கள் ஏற்படுத்தலாம்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிப்பிடம் அமைத்தல், நீர்ப்பாசன நெறிமுறைகளுடன் மரம் நடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற பணிகளில் தனிநபர்கள் அமைப்புகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
இதில் 33 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புடன் நிர்வாகம் பணிகள் மேற்கொள்ளும். இதில் ஆர்வம் உள்ளோர் உரிய பகுதி மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர்களை அணுகலாம் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X