search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்கள்
    X
    பள்ளி மாணவர்கள்

    புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×