என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
Byமாலை மலர்27 Nov 2021 11:38 AM GMT (Updated: 27 Nov 2021 11:38 AM GMT)
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதை பெறுவதற்கு 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் வாயிலாக 9-ம் வகுப்பும், அதற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 0452-2529695-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதை பெறுவதற்கு 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் வாயிலாக 9-ம் வகுப்பும், அதற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 0452-2529695-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X