என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.100-யை தாண்டி விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து காட்பாடி காங்கேயநல்லூர் ரோட்டில் உள்ள பசுமை பண்ணை அங்காடியில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பசுமை பண்ணை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 69-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வேலூர் மார்க்கெட்டிற்கு இன்று தக்காளி வரத்து அதிகமானதால் விலை ஓரளவு குறைந்தது. கிலோ ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையானது.
நேதாஜி மார்க்கெட்டில் (ஒருகிலோவிற்கு) கத்தரி ரூ.100, வெண்டைக்காய் ரூ.100, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்