என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் விடிய விடிய மழை- குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 34.6 மி.மீ மழை பதிவு
Byமாலை மலர்26 Nov 2021 5:57 AM GMT (Updated: 26 Nov 2021 5:57 AM GMT)
பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, நம்பியூர், தாளவாடி, பவானிசாகர், அணை பகுதிகளான குண்டே ரிபள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாநகர பகுதியிலும் பகல் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 5.30 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த சாரல் மழை இரவு முழுவதும் தொடர்ந்தது.
இதேபோல் கொடுமுடியில் இரவு 8 மணி முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மொடக்குறிச்சி, ஏழுமாதூர் பகுதியில் இரவு 7 மணிமுதல் சாரல் மழை பெய்து வருகிறது.
பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணை பகுதியில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-20, கொடு முடி-31.6, பெருந்துறை-18.5, பவானி-15.2, கோபி-9.4, சத்தியமங்கலம்-13.4, பவானிசாகர்-8.4, நம்பியூர்-6, சென்னிமலை-14, மொடக்குறிச்சி-20, கவுந்தப்பாடி-13.2, அம்மாபேட்டை-10.2, கொடிவேரி-8, குண்டேரிபள்ளம்-34.6.
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, நம்பியூர், தாளவாடி, பவானிசாகர், அணை பகுதிகளான குண்டே ரிபள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாநகர பகுதியிலும் பகல் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 5.30 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த சாரல் மழை இரவு முழுவதும் தொடர்ந்தது.
இதேபோல் கொடுமுடியில் இரவு 8 மணி முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மொடக்குறிச்சி, ஏழுமாதூர் பகுதியில் இரவு 7 மணிமுதல் சாரல் மழை பெய்து வருகிறது.
பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணை பகுதியில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-20, கொடு முடி-31.6, பெருந்துறை-18.5, பவானி-15.2, கோபி-9.4, சத்தியமங்கலம்-13.4, பவானிசாகர்-8.4, நம்பியூர்-6, சென்னிமலை-14, மொடக்குறிச்சி-20, கவுந்தப்பாடி-13.2, அம்மாபேட்டை-10.2, கொடிவேரி-8, குண்டேரிபள்ளம்-34.6.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X