என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அணைப்பாளையத்தில் பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்25 Nov 2021 7:38 AM GMT (Updated: 25 Nov 2021 7:38 AM GMT)
போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் கடை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது.
இதனை கண்டித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் அங்கு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X