என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
Byமாலை மலர்24 Nov 2021 6:01 PM GMT (Updated: 24 Nov 2021 6:01 PM GMT)
சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
மாரமங்கலத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை குட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி பலியான கோவிந்தராஜிக்கு சசிகலா (31) என்ற மனைவியும், 11 மற்றும் 9 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X