search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த போது எடுத்தப்படம்.
    X
    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த போது எடுத்தப்படம்.

    அண்ணாமலை முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், சி.த.பழனிச்சாமி மற்றும் சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர்-பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு தலைவர் பிரவீன்குமார், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பி.ஆர். துரைபாண்டி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் கடலூர் பாலமுருகன் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×