search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சகதி நிறைந்து காணப்படும் தென்னம்பாளையம் சந்தை.
    X
    சகதி நிறைந்து காணப்படும் தென்னம்பாளையம் சந்தை.

    மழையால் சகதிக்காடாக மாறிய தென்னம்பாளையம் சந்தை

    நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.    

    கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையானது சகதிக்காடாக மாறியது. இதன் காரணமாக இன்று காலை சந்தைக்கு சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 
    Next Story
    ×