என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மண் வளமாக இருந்தால் விளைபொருட்கள் தரமாக இருக்கும் - வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்
Byமாலை மலர்23 Nov 2021 7:50 AM GMT (Updated: 23 Nov 2021 7:50 AM GMT)
அதிக உணவு உற்பத்திக்கு அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மண் வளமாக இருந்தால் விளை பொருட்கள் தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும் என பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவி பேராசிரியர் தேன்மொழி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
நாடு சுதந்திரம் பெறும் முன் இயற்கை உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தினர். சுதந்திரத்திற்கு பின் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம் குறைய துவங்கியது. நில மேலாண்மை என்பது மண், பயிர், ரகம் தட்பவெப்பநிலை, சுற்றுச்சூழல், நீர்வளம் ஆகிய ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் அடங்கியதாகும். உலகின் இயற்கை ஆதாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மண் வளம் ஆகும்.
அதிக உணவு உற்பத்திக்கு அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சூழல் பாதிக்காத வகையில் நீடித்த நிலையான வேளாண்மை கிடைத்திட மண் வளம் சார்ந்த வேளாண்மை அவசியம். மண் வளமாக இருந்தால் விளை பொருட்கள் தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும். விளைபொருட்களை உண்ணும் மனித சமுதாயமும் வளமாக இருக்கும்.
மண் வளம் மேம்பட மண்ணின் அங்கக கரிம அளவை அதிகரித்தல், மண் ஆய்வு செய்து சமச்சீர் உரமிடல், உயிர் உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரம் இடுதல், ஒருங்கிணைந்த உரம், ஊடுபயிர்கள், பயிர் சுழற்சி முறை மண் அரிப்பை தடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X