என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 பொங்கல் பரிசு பொருட்களில் 100 கிராம் ஆவின் நெய் கிடைக்கும்
Byமாலை மலர்23 Nov 2021 7:27 AM GMT (Updated: 23 Nov 2021 7:27 AM GMT)
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள இந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு குடும்ப அட்டைக்கு 100 கிராம் ஆவின் நெய் வீதம் 2 கோடியே 15 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.135 கோடிக்கு நெய் விற்பனையாகிறது.
மேலும் ஆவின் நிறுவனத்தில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதால் இதனுடைய பலன் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது. 2,400 டன் வெண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றிருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் கிடைப்பதால் அதன் பலன் விவசாயிகளுக்கு சென்று அடைகிறது. 5 ஆயிரம் டன் வெண்ணெய் விவசாயிகள் மூலம் கிடைக்கிறது.
பொங்கல் தொகுப்புக்கு ஆவின் நெய் வழங்கப்படுவதன் மூலம் 2,400 டன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் விரைவாக பால் பணம் கிடைக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.83 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.26 கோடி அதிகமாகும். 46 சதவீதம் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள இந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு குடும்ப அட்டைக்கு 100 கிராம் ஆவின் நெய் வீதம் 2 கோடியே 15 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.135 கோடிக்கு நெய் விற்பனையாகிறது.
மேலும் ஆவின் நிறுவனத்தில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதால் இதனுடைய பலன் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது. 2,400 டன் வெண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றிருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் கிடைப்பதால் அதன் பலன் விவசாயிகளுக்கு சென்று அடைகிறது. 5 ஆயிரம் டன் வெண்ணெய் விவசாயிகள் மூலம் கிடைக்கிறது.
பொங்கல் தொகுப்புக்கு ஆவின் நெய் வழங்கப்படுவதன் மூலம் 2,400 டன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் விரைவாக பால் பணம் கிடைக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.83 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.26 கோடி அதிகமாகும். 46 சதவீதம் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X