search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

    போளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் வசூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த ராஜபாளையத்தை சேர்ந்த தண்டபாணி மகன் கார்த்திக் (வயது 19), ஆலங்காயத்தை அடுத்த புலவர்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பரமேஷ் (19) என்பதும், மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×