search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

    காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சங்கந்திடலை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கழனிவாசல் நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த வீட்டின் போர்வெல்லுக்கான மின்மோட்டார் வயர் இணைப்பினை கவனக்குறைவால் தொட்டுவிட மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×