search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓசூர் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

    ஓசூர் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஓசூரில் சீதாராம்மேடு அருகில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து செல்போனை பறித்தனர். அப்போது, சசிக்குமார் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த 2 பேரையும் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் பார்வதி நகர் குமார் (வயது 25), கும்பாரபேட்டை அஜய்குமார் (24) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×