search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நூல் விலை உயர்வு பிரச்சினையை தீர்க்க திருப்பூரில் அவசர ஆலோசனைக்கூட்டம்-நாளை நடக்கிறது

    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வு பிரச்சினையை தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நாளை நடக்கிறது.

    இதுகுறித்து டீமா தலைவர் முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனியன் மற்றும் ஜவுளி தொழிலுக்கு மூலப்பொருளான நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக முன்பு ஒப்பந்தம் செய்துள்ள ஆர்டர்களை தற்போதைய விலையேற்றத்தால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேலும் புதிய ஒப்பந்தம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சு பதுக்கல், அதிகப்படியாக ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு மத்திய அரசால் 12 சதவீதம் வரி விதிப்பு போன்றவைகளால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதை களைய, திருப்பூர் சார்ந்த அனைத்து தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வியாபார அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மக்கள் சார்பாக அவசர ஆலோசனைக்கூட்டம் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் காயத்திரி ஓட்டலில் நடக்கிறது. 

    இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×