search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பரமத்திவேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    பரமத்திவேலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரியாறு நீரேற்று பாசன நிலைய பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது பொத்தனூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 44), பாலசுப்ரமணி (57), குணசேகரன் (60), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மதியழகன் (52) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,230-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×