search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வயல் பகுதிக்கு சென்று ஆட்டிற்கு மரக்கிளைகளில் இருந்து பசுந்தழைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கு மேலே சென்ற மின் கம்பியில் மரக்கிளை விழுந்து மரக்குச்சி வழியாக மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×