என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழியில் ஓட்டல் தொழிலாளியுடன் பெண் மாயம்
Byமாலை மலர்20 Nov 2021 10:19 AM GMT (Updated: 20 Nov 2021 10:19 AM GMT)
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஓட்டல் தொழிலாளியுடன் பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மயிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 47). இவர் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று துணி தைக்க செல்வதாக வீட்டில் மகளிடம் கூறிவிட்டு லதா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மகன் அருண்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில், தனது தாயாருடன் ஓட்டலில் வேலை பார்த்த ஜாகீர் உசேன் என்பவரும் மாயமாகி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வயிற்று வலி என பள்ளிக்கு செல்லாத மாணவி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் கருப்பசாமி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து தையல் வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் திடீரென மாயமாகி விட்டார். அவரது 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மயிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 47). இவர் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று துணி தைக்க செல்வதாக வீட்டில் மகளிடம் கூறிவிட்டு லதா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மகன் அருண்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில், தனது தாயாருடன் ஓட்டலில் வேலை பார்த்த ஜாகீர் உசேன் என்பவரும் மாயமாகி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வயிற்று வலி என பள்ளிக்கு செல்லாத மாணவி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் கருப்பசாமி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து தையல் வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் திடீரென மாயமாகி விட்டார். அவரது 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X