என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வலங்கைமானில் பரவலாக மழை- மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை
Byமாலை மலர்20 Nov 2021 10:13 AM GMT (Updated: 20 Nov 2021 10:13 AM GMT)
வலங்கைமான் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதி கன மழை பெய்யவில்லை என்றாலும் குளம் குட்டைகள் அனைத்தும் நிரம்பின. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் வலங்கைமானில் பல இடங்களில் சாகுபடி நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சற்று மழை ஓய்ந்திருந்தது. இதனால் விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அனைத்தும் வடிந்த நிலையில் இருந்தது.
இந்தநிலையில் நேற்று வலங்கைமானில் கனமழை பெய்ததால் தாழ்வான விளைநிலங்கள் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. புளிக்குடி ஊராட்சி அமிர்தவல்லி கிராமத்தில் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
மேலும் மாணிக்கமங்கலம், கீழ விடையள், குப்பசமுத்திரம், அரித்துவாரமங்கலம், அவளிவநல்லூர், தென்குவளை வேலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி விளைநிலங்கள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளன. செம்மங்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி நெற்பயிர்கள், கனமழையால் வயலில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறினர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதி கன மழை பெய்யவில்லை என்றாலும் குளம் குட்டைகள் அனைத்தும் நிரம்பின. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் வலங்கைமானில் பல இடங்களில் சாகுபடி நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சற்று மழை ஓய்ந்திருந்தது. இதனால் விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அனைத்தும் வடிந்த நிலையில் இருந்தது.
இந்தநிலையில் நேற்று வலங்கைமானில் கனமழை பெய்ததால் தாழ்வான விளைநிலங்கள் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. புளிக்குடி ஊராட்சி அமிர்தவல்லி கிராமத்தில் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
மேலும் மாணிக்கமங்கலம், கீழ விடையள், குப்பசமுத்திரம், அரித்துவாரமங்கலம், அவளிவநல்லூர், தென்குவளை வேலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி விளைநிலங்கள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளன. செம்மங்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி நெற்பயிர்கள், கனமழையால் வயலில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X