search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதல்
    X
    கள்ளக்காதல்

    கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் கல்லூரி மாணவருடன் 40 வயது இளம்பெண் ஓட்டம்

    பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் 19 வயது கல்லூரி மாணவருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×