search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேலம் அருகே வனத்துறை அதிகாரி மகள் தற்கொலை

    டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் வனத்துறை அதிகாரி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியை சேர்ந்தவர் குமார். வனத்துறை பார்வையாளராக உள்ளார். இவர் தற்போது வீராணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார். நேற்றும் ஐஸ்வர்யா டி.வி. பார்த்ததால் அதை அவரது தாய் ராணி கண்டித்தார். பின்னர் ராணி கடைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கிய நிலையில் ஐஸ்வர்யா உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராணி கதறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஐஸ்வர்யாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் ராணி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    தகவல் அறிந்த குமாரும் அங்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறினார். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. தகவல் அறிந்த வீராணம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வீராணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்து உள்ளனர்.
    Next Story
    ×