என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்த 5 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2021 10:54 AM GMT (Updated: 18 Nov 2021 10:54 AM GMT)
சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சீர்காழி நோக்கி வந்த இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில 140 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த சட்டநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (28), சீர்காழி தென்பாதி வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), தென்பாதி எம் ஆர் ராதா நகரைச் சேர்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோல் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் மதுபான பாட்டில்கள் 148 இருந்ததை கைப்பற்றி ஆட்டோவில் வந்த சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர் (26) அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சீர்காழி நோக்கி வந்த இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில 140 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த சட்டநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (28), சீர்காழி தென்பாதி வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), தென்பாதி எம் ஆர் ராதா நகரைச் சேர்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோல் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் மதுபான பாட்டில்கள் 148 இருந்ததை கைப்பற்றி ஆட்டோவில் வந்த சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர் (26) அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X