search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    10-ம் வகுப்பு துணை தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

    மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வருகிற 22, 23 ஆகிய நாட்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் தனி தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி 10-ம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 16 முதல் 28-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

    இந்த தேர்வின் முடிவுகள் நாளை (19-ந் தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தற்காலி மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த தேர்வுக்கான மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் உரிய முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வருகிற 22, 23 ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×