என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு- 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
Byமாலை மலர்17 Nov 2021 6:24 PM GMT (Updated: 17 Nov 2021 6:24 PM GMT)
நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகன் கோபி (23). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X