search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவிக்கு திருமணம்- மணமகன் உள்பட 3 பேர் கைது

    குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களது மகன் கார்த்திக் (வயது 25). இவருக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.

    இந்த குழந்தை திருமணம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் கவரம்மாள், சிறுமியின் தாயார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×