என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலகவுண்டம்பட்டி அருகே குடிபோதையில் அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது

    வேலகவுண்டம்பட்டி அருகே குடிபோதையில் அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தில் இருந்து கோலாரம் செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று புள்ளாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் திடீரென டவுன் பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர். இதை தட்டி கேட்ட பஸ் டிரைவர் குமார் (46) என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து குமார் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சை சேதப்படுத்தியவர்களை பிடிக்க முயன்றபோது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் வசந்தகுமார் (வயது 22), அத்தப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தப்பியோடிய சவுந்தர் என்ற பிரதீப்பை வலைவீசி (21) தேடி வருகின்றனர்.
    Next Story
    ×