search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது: வைகோ அறிக்கை

    வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.
    சென்னை

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்’ என்று பேசி இருக்கின்றார். மேலும் ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்பு சட்டத்துக்கு எதிரான அடக்குமுறை போக்கு ஆகும்.

    உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும். வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், தந்தை பெரியார், ‘வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால் தமிழன் இந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்’ என்று சொன்னார். அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×