என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்14 Nov 2021 9:18 AM GMT (Updated: 14 Nov 2021 9:18 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ராணி சகுந்தலா என்பவரின் மகள் ஷர்மிளா (22) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஷர்மிளா அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தங்கையை பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.
இதனால் சார்லஸ் மற்றும் ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ஷர்மிளா வீட்டில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது சம்மந்தமாக பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதிலக்கவில்லை. மேலும் இது சம்மந்தமாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ராணி சகுந்தலா என்பவரின் மகள் ஷர்மிளா (22) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஷர்மிளா அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தங்கையை பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.
இதனால் சார்லஸ் மற்றும் ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ஷர்மிளா வீட்டில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது சம்மந்தமாக பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதிலக்கவில்லை. மேலும் இது சம்மந்தமாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X