search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    திருவையாறில் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க.வினர் மீது வழக்கு

    கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறைகளான முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக பா.ம.க.வினர் மீது திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    திருவையாறு:

    திருவையாறு பேருந்து நிலையத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி வன்னியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 50 பேர் மீது கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறைகளான முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×