search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    விருதுநகரில் இளம்பெண் சித்ரவதை- கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

    இளம்பெண்ணை சித்ரவதை செய்வதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சீமா (வயது 29), என்ஜினீயர். இவருக்கும், விருதுநகர் முத்துச்சாமி தெருவைச் சேர்ந்த அஜய் சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 42 பவுன் நகைகள், ரூ.1 ½ லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்கு வைர மோதிரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவர் வீட்டார் சித்ரவதை செய்ததாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், சீமா புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கணவர் அஜய் சுதர்சன், அவரது பெற்றோர் சக்திவேல்-ஞானசக்தி மற்றும் சகோதரி லட்சுமி நாராயணி ஆகியோர் அடிக்கடி சித்ரவதை செய்ததாகவும், நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவிட்டதின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அஜய் சுதர்சன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×