search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

    தஞ்சையில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கீழவாசலை சேர்ந்த அருள் ராஜேந்திரன் மகன் ஸ்டாலின் (வயது26) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10000 ஆகும்.

    இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×