என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஸ்வரூபம் எடுக்கும் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி விளையாட்டு மைதான கட்டுமானப்பணி
Byமாலை மலர்13 Nov 2021 7:22 AM GMT (Updated: 13 Nov 2021 7:22 AM GMT)
எதிர்காலத்தில் கூடுதல் பாடப்பிரிவு தொடங்கும்போது இடநெருக்கடி ஏற்படும் என முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசுக்கல்லூரி பின்புறம் 11 ஏக்கர் இடத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது. அடுத்தாண்டு மே 31-ந்தேதிக்குள் செயற்கை ஓடுதளம், கேலரி, வாலிபால், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, ஆக்கி மைதானம், ஹேண்ட்பால், கபடி உள்ளிட்ட மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெற்ற பின்பே பணிகள் தொடங்கியுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பணிக்கான ஒப்புதல் முறையாக வந்து சேரவில்லை. கல்லூரி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி தரக்கூடாது. எதிர்காலத்தில் கூடுதல் பாடப்பிரிவு தொடங்கும்போது இடநெருக்கடி ஏற்படும் என முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் முன்னாள் மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , கல்லூரிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை விளையாட்டுத்துறை உத்தரவாதம் எதுவும் இல்லாமலேயே உள் விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி விளையாட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கல்லூரி வளாகத்தில் பொருட்காட்சி அமைக்க மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதில் கல்வி சார்ந்த பணிகளைத்தவிர வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கவோ, பணிகள் செய்யவோ கூடாது என தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இச்சூழலில் விளையாட்டரங்குக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரர் மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் கட்டுமானப்பணிகளை தொடங்க முயற்சிக்கிறார்.
முறைகேடாக சட்டவிரோதமாக கல்லூரிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X