search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக 42 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பைவிட 56 சதவீதம் அதிகம் என்று ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. இந்த 5 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 4 செ.மீ. மழை பதிவாகும். அந்தவகையில் இது இயல்பைவிட 142 சதவீதம் அதிகம்.

    அதேபோல், சென்னையில்தான் இந்த 4 நாட்களில் அதிக மழை பொழிந்துள்ளது. அதன்படி மாநகரில் 4 நாட்களில் 46 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சென்னையில் 8 செ.மீ.தான் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. இது இயல்பைவிட 491 சதவீதம் அதிகம் ஆகும்.


    Next Story
    ×