என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல்
Byமாலை மலர்13 Nov 2021 1:51 AM GMT (Updated: 13 Nov 2021 1:51 AM GMT)
தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை :
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சசிகலா, டெம்போ வேனில் சென்று நேற்று பார்வையிட்டார். தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலைகள், பிஸ்கட் பாக்கெட், பால் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் சசிகலா வேனில் இருந்தவாறு பேசியதாவது:-
மழைவெள்ளத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். பயிர்கள் நாசமாகி விவசாயிகளும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றவும் மத்திய அரசு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பற்றத்தான் அரசுகள் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு மிக விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் நேற்று பயணித்த ‘டெம்போ’ வேனிலும் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்தது.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சசிகலா, டெம்போ வேனில் சென்று நேற்று பார்வையிட்டார். தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலைகள், பிஸ்கட் பாக்கெட், பால் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் சசிகலா வேனில் இருந்தவாறு பேசியதாவது:-
மழைவெள்ளத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். பயிர்கள் நாசமாகி விவசாயிகளும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றவும் மத்திய அரசு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பற்றத்தான் அரசுகள் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு மிக விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் நேற்று பயணித்த ‘டெம்போ’ வேனிலும் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X