என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது40). இவர் அதே பகுதியில் மாடுவியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது35). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடராஜன் மாட்டு வியாபாரி சங்கரிடம் மாடு ஒன்றை பெற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்துள்ளார். பின்னர் மாடு விற்பனை செய்த பணத்தை நீண்ட நாட்களாக வியாபாரி சங்கர் இடம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், நடராஜனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த நடராஜன் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்