என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்ததால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் உள்ளது. தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் மழையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு சில நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    Next Story
    ×